இந்தியாவின் முதல் 'எதிரி' இவரு தான்... என் மீது வழக்கு போட்டாலும்.. வைகோ ஆவேச பேச்சு.!
Vaiko says India first enemy PM
மதுரை, நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆதரித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், இந்திய வரலாற்றில் இது முக்கியமான தேர்தல். இந்தியாவில் சர்வாதிகாரம் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இதுதான்.
இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கு பிரதமராக இருக்கும் மோடி தமிழகத்தை பிரித்துப் பார்க்கிறார். தமிழகம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது மக்களுக்கு ஆறுதல் சொல்ல வராத பிரதமர் தேர்தலுக்காக தமிழகத்திற்கு எட்டு முறை வந்துள்ளார்.
திராவிட இயக்கங்களை ஒழித்து விடுவேன் என மோடி தெரிவித்து வருகிறார். திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தவர்கள் இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.
அரசியல் சட்டத்தை மாற்ற பா.ஜ.க நினைக்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பா.ஜ.கவினர் செயல்படுகின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யாவில் இது இருப்பது போல் இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர நினைக்கின்றனர். இந்தியாவில் முதல் எதிரி பிரதமர் மோடி தான் என நான் பகிரங்கமாக சொல்கிறேன்.
இதற்காக என் மீது வழக்கு தொடர வேண்டும் என்றாலும் போட்டுக் கொள்ளலாம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Vaiko says India first enemy PM