மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்.! - Seithipunal
Seithipunal


பாஜகவின் மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் படி தமிழகம் வந்த அவர், நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு, இரவு மதுரைக்கு வந்து அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் முக்குறுணி விநாயகர், சுந்தரேசுவரர் சன்னதிகளுக்கு சென்று ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தை வலம் வந்து, கொடிமரம் பகுதியில் உள்ள பிரமாண்டமான தூண்கள், சிற்பங்கள், சிலைகள், கோபுரங்கள் என்று கோவிலில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். 

ராஜ்நாத் சிங் வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் 9 மணி முதல் 10 மணி வரை பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister rajnath singh swami dharisanam in meenatchi amman temple


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->