குட் நியூஸ்!!! கோடை மழையால் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்...!!! - தமிழக மின்சார வாரியம்
Uninterrupted electricity provided due to summer rains Tamil Nadu Electricity Board
தமிழக மின்வாரியம்,கோடை மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக, மின்சாதன பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் தேவை 22,000 மெகா வாட்டை தாண்டும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இதைப் பூா்த்தி செய்ய ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6,000 மெகாவாட் மின்சாரம் தனியாா் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்று ரூ.9-க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்நிலையில், தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது.
மேலும், மின் தேவையை மின்வாரியம் முறையாகக் கையாண்டு வந்தது.இந்நிலையில் கோடை மழை, கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்தது.
மேலும், கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது தொடா்ச்சியாக கோடை மழை பெய்து வருவதால், பல இடங்களில் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக தினசரி மின்தேவை 17,000 முதல் 18,000 மெகாவாட்டாக குறைந்துள்ளது.அதுமட்டுமின்றி, தமிழகத்தின் தினசரி மின்தேவை இனி அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும், இதனால் தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Uninterrupted electricity provided due to summer rains Tamil Nadu Electricity Board