திமுக மாஜி சேர்மேனின் சாதிவெறியால், தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளர்!  - Seithipunal
Seithipunal


உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் சாதி வெறியுடன் திட்டியதால், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் :  உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் சுடலை மாடனை, அப்பேரூராட்சி தலைவரின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆயிஷா சாதியைச் சொல்லி இழிவாக திட்டியதாக சொல்லப்படுகிறது.

ஆயிஷாவின் வீட்டின் அருகே கிடந்த குப்பையை அல்லாததால், சாதிவெறியுடன் சுடலை மாடனை திட்டியுள்ளார் ஆயிஷா, இதனால் அவமானமடைந்த சுடலை மாடன், கடந்த 14ம் தேதி பூச்சிக்கொல்லி அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

கடந்த 5  நாட்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுடலை மாடன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில், சுடலை மாடனை சாதியைச் சொல்லி இழிவாக பேசிய பேரூராட்சி தலைவரின் மாமியார் ஆயிஷா மற்றும் அதிகாரி பாபு மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யக் கோரி, பல்வேறு பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udankudi DMK Ayisha case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->