சினிமாவில் கதாநாயகி ஆக ஆசைப்பட்ட கல்லூரி மாணவி: ஏமாற்றி ரூ.24 லட்சம் மோசடி செய்துள்ள 02 நபர்கள்..! - Seithipunal
Seithipunal


மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர் தனது சுயவிவரத்தை திரைத்துறையை சார்ந்த நபர்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த சுயவிபரத்தை பார்த்து, நபர் ஒருவர் குறித்த மாணவியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதாவது, அவருக்கு, தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளதோடு, மற்றும் சிலரின் தொடர்பு எண்களை கொடுத்து அவர்களிடம் பேசுமாறு மாணவியிடம் தெரிவித்துள்ளார். கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்த மாணவியும், அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர்கள், நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் ரூ.24 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதனை நம்பிய அந்த கலோரி மாணவி, தனது பெற்றோரிடம் ரூ.24 லட்சம் பணத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு  அவர்கள் குறித்த மாணவியின் தொடர்பை துண்டித்துள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத மாணவி பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, போலீசில் புகார் அளித்துள்ளார்.

மாணவியின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், லக்னோவைச் சேர்ந்த தருண் சேகர் சர்மா, டெல்லியைச் சேர்ந்த ஆஷா சிங் ஆகிய 02 பேரை கைது செய்து விசாரணை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

02 persons cheated a college student who wanted to become a heroine in cinema and defrauded her of Rs 24 lakhs


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->