நாமக்கல்: இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதி விபத்து - வாலிபர் பலி - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சித்தாராம்பாளையம் பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் ராஜ்குமார் (33). இவரது மனைவி தீபிகா. ராஜ்குமார் திருசெங்கோடு பகுதியில் உள்ள லாரி பட்டறையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு, மனைவியின் சொந்த ஊரான பொட்டிரெட்டிபட்டியில் விட்டுவிட்டு மீண்டும் திருசெங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது எருமைப்பட்டி அருகே வந்தபோது நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி சென்ற டேங்கர் லாரி எதிர்ப்பாராத ராஜ்குமார் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler tanger lorry accident in namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->