பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வாலிபர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிதம்பரம் ஆயக்குடியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் கார்த்திக்(22). இவர் சிங்கம்புணரி அருகே உள்ள நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பெரியம்மா மகன் அருண்குமாருடன், கார்த்திக் சிங்கம்புணரி வங்கியில் பணம் பரிவர்த்தனைக்காக சென்றுள்ளனர்.

அப்பொழுது அதற்கான ஆவணம் தேவைப்பட்டதால் கார்த்திக் மட்டும் இருசக்கர வாகனத்தில் சிங்கம்புணரி நோக்கி சென்றதில், அணைக்கரைப்பட்டி பாலாற்றில் அமைந்துள்ள பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார்த்திக் பலத்த காயமடைந்த நிலையில் அவ்வழியாக வந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் கார்த்திகை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler collides with bridge


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->