சாலையில் தறிகெட்டு ஓடிய வேன் - இருவர் படுகாயம்.!
two peoples injured for accident in chennai pazhavanthangal
சென்னையில் உள்ள பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசியில் இருந்து சென்னைக்கு பால் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேன் சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காயமடைந்தனர். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் கவிழ்ந்த சரக்கு வேனை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
two peoples injured for accident in chennai pazhavanthangal