திருப்பூரில் பயங்கரம் : ஆறு வருடமாக பாலியல் தொல்லை - போக்ஸோவில் கைதான பெரியப்பா, அண்ணன்.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் பயங்கரம் : ஆறு வருடமாக பாலியல் தொல்லை - போக்ஸோவில் கைதான பெரியப்பா, அண்ணன்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் கொண்டரசம்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ். மாற்றுத்திறனாளியான இவர் அதே கிராமத்தில் ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்திற் வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், தாராபுரம், திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று ஜெராக்ஸ் மெஷின்களை சர்வீஸ் செய்தும்  வருகிறார். 

இந்த நிலையில், தங்கராஜ் தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதனால் தனது தம்பி மகளை உதவிக்கு அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்திருந்தார். அப்போது அந்த சிறுமியை தனது மகள் என்றும் கூட பாராமல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படி சுமார் ஆறு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணின் அண்ணன் முறையாக இருந்த முப்பது வயது வாலிபர் ஒருவரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து அண்ணனும் பெரியப்பாவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததைத் தாங்காமல் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை சம்பவம் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் பெண்ணின் பெரியப்பா மற்றும் அண்ணன்  இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for sexuall harassment in tirupur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->