#விருதுநகர் || பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில், பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நேற்று இரவு பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக மண் தோண்டும் பணியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் குகையூர் குகையூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் சக்திவேல் உட்பட ஏழு பேர் ஈடுபட்டனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக குழி தோண்டும் போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சக்திவேல் மண் சரிவில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மண்ணில் புதைந்த இருவரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two laborers killed in landslide in virudhunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->