ஈரோடு : பெருந்துறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞர் - 20 ஆண்டு சிறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட சில முக்கிய தொழில் நகரங்களில் பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து அறை எடுத்து தங்கி அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த வகையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பர்கானாஸ் பாகனஹள்ளி பகுதியை சேர்ந்த சாய்புதின் லஸ்கர் என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். 

இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமிக்கு கரும்பு ஜூஸ் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு சாய்புதின் லஸ்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிபதி மாலதி முன்பு நடைபெற்றது. இது தொடர்பாக அவர், "சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாய்புதின் லஸ்கருக்கு இருபது ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty years jail penalty to north state youth for sexual harassment


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->