குடுகுடுப்பைக்காரன் பெயரில் திருடன்.. தாலி சங்கிலியை பறிகொடுத்த பெண்மணி, மனதுடைந்து தற்கொலை.!
Trichy Thiruvanaikoil Woman Suicide 12 Oct 2021
குடுகுடுப்பைக்காரன் சொன்னதை நம்பி தாலி சங்கிலியை பறிகொடுத்த பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் பகுதியை சார்ந்தவர் சுகந்தி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருக்கையில், அவரது வீட்டிற்கு குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் திருடன் வந்துள்ளான். இதனை அறியாத பெண்மணி அவன் சொல்வதை அருள்வாக்கு என எண்ணியுள்ளார்.
குடுகுடுப்பைக்காரன் என்ற பெயரில் வந்த திருடனோ, உனக்கு தாலி தோஷம் உள்ளது, உனது கணவன் உயிருக்கு ஆபத்து என கதையை அளந்துவிட, பதறிப்போன பெண்மணி பரிகாரம் கேட்டுள்ளார். அவரிடம் இருந்து நைசாக பேசி தாலி தங்கச்சங்கிலியை வாங்கியவன் அங்கிருந்து சிறகடித்து பறந்து சென்றுள்ளான்.
நகையை பறிகொடுத்த பெண்மணிக்கு தாமதமாக நிலை உணர்வுக்கு வர, மனதுடைந்து போன சுகந்தி வீட்டில் தனிமையில் இருந்து புலம்பியுள்ளார். பின்னர், நகையை பறிகொடுத்துவிட்டோமே என்ற மன உளைச்சலில் பெண்மணி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவானைக்காவல் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சுகந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Trichy Thiruvanaikoil Woman Suicide 12 Oct 2021