காதலர் தினத்தில்.. தாலிக்கயிறுடன் சுற்றியவர்கள் போலீசாரால் கைது.! திருச்சியில் குறிப்பிட்ட அமைப்பினர் அட்டகாசம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மிக முக்கிய அடையாள சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இதன் அடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகர் சன்னிதியும் தாயுமானவர் கோவிலும் மலைக்கோட்டையின் உச்சிப் பகுதியில் பிள்ளையார் கோவிலும் இருக்கிறது. 

இத்தகைய நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மலைக்கோட்டைக்கு காதலர்கள் சாமி தரிசனம் செய்ய ஜோடி ஜோடியாக வந்துள்ளனர். அப்பொழுது வீர விவேகானந்தர் பேரவை மற்றும் அனுமன் சேனா அமைப்புகளைச் சேர்ந்த 3 பேர் அப்பகுதியில் இருந்து கொண்டு காதலர்களை தொந்தரவு செய்துள்ளனர்.

அவர்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்தபோது விடாமல் தடுத்து திருச்சி மலைக் கோட்டையை காதல் கோட்டையாக மாற்றக்கூடாது என்று கூறி அவர்களுக்கு தாலிக்கயிறை கொடுத்து போராட்டம் செய்ய ஆரம்பித்தனர். 

கோவிலுக்கு சென்ற பக்தர்களை இடையூறு செய்ததாக திருச்சி காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மலைக்கோட்டையில் காதலர்களை சாமி தரிசனம் செய்ய போலீசார் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy hindu Activist are arrested by police


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->