6 மாத தலைமறைவு வாழ்க்கை.. பெண்களின் வாழ்க்கையை சீரழித்த எட்வின் சிக்கிய கதை.!!
Trichy Fraud Edwin Jayakumar Arrest By Police
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை மஸ்தான் தெரு பகுதியை சார்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (வயது 36). இவர் விராலிமலை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தஞ்சாவூர் பகுதியை சார்ந்த தாட்சகர் (வயது 32) என்பவருக்கும் இடையே கடந்த 2019 ஆம் வருடத்தின் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த திருமணத்திற்கு பின்னர் ஜெயக்குமார் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், கணவன் - மனைவிக்கிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஜெயக்குமாரின் அலைபேசியை எதற்ச்சையாக எடுத்து பார்த்த மனைவிக்கு பெரும் அதிர்ச்சியாக, ஜெயக்குமார் பல பெண்களுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து தாட்சகர் அங்குள்ள வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் எட்வின் ஜெயக்குமாரை கைது செய்ய முயற்சித்தனர். இதனை அறிந்த எட்வின் தப்பி சென்ற நிலையில், அவரது வங்கிக்கணக்கில் இருந்து தொடர்ந்து பணப்பரிவர்த்தனை நடந்து வந்துள்ளது. கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த எட்வினை நேற்று திருச்சி - மணப்பாறை சாலையில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy Fraud Edwin Jayakumar Arrest By Police