சொல்லாமல் விடுப்பு எடுத்தால் நடவடிக்கை - ஓட்டுநர், நடத்துனர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை .! - Seithipunal
Seithipunal


அரசு போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முன் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக கண்ட்ரோல் சார்ட்டில் ஓட்டுனர், நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.

மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும். முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்" என்று போக்குவரத்துக்கு கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

transport department say action against govt bus driver conductor for leave


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->