வெள்ளப்பெருக்கு - விழுப்புரத்தில் தற்காலிகமாக ரெயில் சேவை ரத்து.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதிலும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

அதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் ஏற்பட்டு மக்களின் இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் ரெயில்சேவை, போக்குவரத்து சேவை உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை - விழுப்புரம் இடையேயான ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் - திருவண்ணாமலை வழித்தடத்திலும் ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

train service temprory cancelled in vilupuram


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->