திருவாரூர் அருகே பெரும் சோகம்!...காதல் தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த உதய பிரகாஷ் என்பவரும், நாகை மாவட்டம், நீடூர் வேளாங்கண்ணியை சேர்ந்த ஹேமா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஹேமா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த காதல் ஜோடி திருமணம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், காதல் தம்பதி ஆட்டூர் தோப்பு தெருவில் உள்ள உதய பிரகாஷின் உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில்,  இன்று அதிகாலை உதய பிரகாஷ் எழுந்து பார்த்த போது, ஹேமா வீட்டில் தூக்கிட்டு பிணமாக கிடந்தார்.

இதனைக் கண்ட உதய பிரகாஷ் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். மேலும்  மிகவும் மனமுடைந்த உதய பிரகாஷ் வீட்டின் எதிரே உள்ள புளியமரத்தில் தூக்கு மாட்டி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார்,  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy near tiruvarur love couple hang themselves one after the other


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->