குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை .! - Seithipunal
Seithipunal


குற்றாலத்தில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழையினால் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில் குற்றாலம் ஐந்தருவியில் நேற்று மாலை 4.45 மணியளவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்தானது என்பதால் அருவியில் நின்றவர்களை போலீசார் வெளியேற்றினார்கள்.

இதேபோல் மாலை 5.25 மணியளவில் மெயின் அருவியிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்தால்தான் குளிக்க அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourists are prohibited from taking a bath due to sudden flood in Kutrala waterfalls


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->