தங்கத்துடன் போட்டிபோடும் தக்காளி விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.60 வரை உயர்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக 90 வாகனங்களில் வரும் தக்காளி தற்போது 40 இருந்து 45 வாகனங்களில் மட்டுமே வருவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

இதனால் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனையாகிறது. இப்போதுள்ள சூழலில் தக்காளியை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி கோயம்பேட்டுக்கு விற்பனைக்கு எடுத்து வருகிறோம். அண்டை மாநிலங்களில் மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து தக்காளி வரத்து குறையும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomoto price increased in tamilnadu


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->