தொடரும் பதற்றம் - மயிலாடுதுறையில் நாளை 7 பள்ளிகளுக்கு விடுமுறை.!
tomarrow holiday to seven schools in mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள, செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு நேற்று இரவு பொதுமக்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை மீண்டும் செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்கு வாய்க்காலில் சுற்றி திரிந்த பன்றியை கடித்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும் விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும். வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 10 குழுக்கள் அமைத்து சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tomarrow holiday to seven schools in mayiladuthurai