தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Today thiruvarur district local holiday
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தியாகராஜசுவாமி கோயில் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து திரண்டு வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக எந்த கோவில்களும் திறக்கப்படாமல் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போதைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு, திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் தியாகராஜ சுவாமி தேர் திருவிழா கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் இன்று ஆழித்தேர் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Today thiruvarur district local holiday