திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களே... இது உங்களுக்காக... மிஸ் பண்ணிடாதீங்க..!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 

நடைபெறும் இடம்: பட்டாபிராம், தருமமூா்த்தி இராவ் பகதூா் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி.

இதில், 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று மெஷின் ஆபரேட்டா், வெல்டா், பிட்டா், மெஷினிஸ்ட், எலக்ட்ரிசியன், புரொடக்சன் ஆபரேட்டா், விற்பனை மேலாளா், ஓட்டுநா், எச்.ஆா்.எக்சிகியூட்டிவ் டெவலப்மெண்ட் மேனேஜா் போன்ற 10,000 காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம்.

கல்வி தகுதி: 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், செவிலியா் கல்வித் தகுதியுடையவா்கள் மற்றும் முதுநிலை மேலாண்மை படித்தவா்களும் பங்கேற்கலாம். 

மேலும் இந்த முகாமில் பங்கேற்போர் தங்களுடைய 4 புகைப்படம், குடும்ப அட்டை, ஜாதி, கல்வி சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Private sector employment camp in tiruvallur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->