தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் வருகின்ற இன்று (ஜூலை 24ஆம் தேதி)  50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 96 சதவீதத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 87 சதவீதத்தை நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் கடந்த வாரம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

அதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 24ஆம் தேதி) தமிழக முழுவதும் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதில் அதிகமாக பூஸ்டர் தடுப்பூசியை போடும் பணியை செய்ய உள்ளோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today mega Vaccination camp in tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->