கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (28.01.2022) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஜனவரி 28ஆம் தேதி) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த வேலை வாய்ப்பு முகாம் மாநில அரசின் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் நடைபெற உள்ளது.

அதன்படி, சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலை தேடுபவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ், புகைப்படம், சுயவிவர ஆவணங்களை எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today mega employment camp in kallakuruchi district


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->