வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


வருகிற 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று வரை சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

அதனால், இன்றைய தினம் இதுவரைக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யாத பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். பொதுவாக கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். 

அதன் காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நேரமான மதியம் 3 மணிக்குள் டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி டோக்கன் பெற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்த பின்னரும் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேட்புமனு பரிசீலனை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today last date of Filing nomination for election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->