மழை வெள்ளம்.. இன்று குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Today holiday for sirkazhi thaluk due to rain floods
தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.
அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெயத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த தொடர் கனமழை காரணமாக ஒருசில பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கனமழை, வெள்ளம் காரணமாக இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
Today holiday for sirkazhi thaluk due to rain floods