தமிழகத்தில் அதிகரித்த ஒமைக்ரான்.. மீண்டும் ஊரடங்கு.!!
today evening lockdown announcement
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றும் முடிவடைகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனிடையே, ஒமைக்ரான் பரவலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆகையால், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும், புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் இன்று மாலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார்.
பல மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
today evening lockdown announcement