தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்.. இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில்.!
Today 100 plus paranheat 15 places in tamilnadu
தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வெப்பம் வருகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் கடுமையான அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அந்த வகையில் சென்னை மீனம்பாக்கத்தில் 107.6, கடலூர் 100.4, தர்மபுரி 101.3, ஈரோடு 101.48, கரூர் பரமத்தி 104, மதுரை நகரம் 102.2, மதுரை விமான நிலையம் 102.5, பாளையங்கோட்டை 101.3, புதுச்சேரி 102.5, சேலம் 102, திருப்பத்தூர் 101.48, திருச்சி 102.74, திருத்தணி 106.7, வேலூர் 107.6 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
English Summary
Today 100 plus paranheat 15 places in tamilnadu