சமூகநீதி அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி பதவி உயர்வு! ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்த தமிழ்நாடு அரசு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகளில், சமூகநீதி அடிப்படையில் நடைமுறையில் இருந்த தரவரிசைப் பட்டியல் தொடர்பான நடைமுறையில், உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இது எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை மதித்து, உரிய சட்ட தீர்வுகள் கூறும் வகையில் ஆய்வு செய்யும் குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் தலைமையில் விசேட ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னை தலைமையிடமாக செயல்படவுள்ளது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவின் செயல்பாடுகளுக்கு துணை புரிய தேவையான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களையும் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமூகநீதி மீதான தமிழ்நாடு அரசின் நம்பிக்கையை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, சட்ட ரீதியான பார்வையில் தற்போதைய நிலையை மதித்து தீர்வுகள் கூறுவதே நோக்கமாகும்.

மேலும், இந்த குழு மூன்று மாதத்துக்குள் தனது பரிந்துரைகள் மற்றும் முழுமையான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Reservation TN Govt order


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->