குரூப் 4 தேர்வு முடிவுகள் - அறிவிப்பு வெளியீடு! - Seithipunal
Seithipunal



குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிரெண்டான நிலையில், தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது என்று, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுகளை உடனடியாக வெளியிட வேண்டுமென ட்விட்டர் வாயிலாக நேற்று #wewantgroup4results ஹேஷ்டேக்  இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நடைபெற்றது. 

மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது.

டிசம்பரில் வெளியாகும், பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தெரிவித்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.

இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று,   #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் மூலம் தேர்வர்கள் ட்ரண்ட் செய்தனர்.

சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாத, இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group4 Result 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->