புரட்டி எடுக்க போகும் புயல் - டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் டிசம்பர் 5 ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதியில் கரையைக் கடக்க உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு, புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிசி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், டிசம்பர் 4 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவருக்கான நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் படி, வரும் திங்கள் கிழமை (04.12.2023) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்று நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு வரும் 06.12.2023 (புதன் கிழமை) அன்று மாற்றப்பட்டுள்ளது.

இதேப்போல், புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு வரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tnpsc exam postpond for storm


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->