விடுமுறை அளிக்காவிட்டால் நடவடிக்கை பாயும்.. தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.!!
TNGovt waring to private companies pay holiday on April19
இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன்படி வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முழுவதும் ஒரே கட்டமாக மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் இவரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
TNGovt waring to private companies pay holiday on April19