பார் இயங்கும் நேரத்தில் மாற்றம்... தமிழக அரசு பரிசீலனை... நீதிமன்றத்தில் டாஸ்மார்க் நிர்வாகம் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை மற்றும் பார்கள் தினமும் 10 மணிக்கு வரை இயங்குவதால், 10 மணிக்கு மேல் குடிப்பவர்களால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது டாஸ்மாக் மதுபான கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா..? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த டாஸ்மாக் நிர்வாக தரப்பு வழக்கறிஞர் "மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அதில் மனுதாரர் தலையிட முடியாது" என பதில் அளித்தார். மேலும் டாஸ்மாக் பார்களை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNgovt consider tasmac bar opening hours extension


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->