சேதமடைந்த 33 மீனவ படகுகளுக்கு ₹ 1.23 கோடி நிவாரணம்.!! தமிழக அரசு அறிவிப்பு.!!
TNGovt announced relief fund for 33 damaged fishing boats
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு சேதம் அடைந்த தமிழக மீனவர்களின் 33 படங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மீனவர் நலனில் அக்கறை கொண்ட இவ்வரசானது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
அதன்படி விடுபட்டு போன 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் 12 நாட்டு படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் ஆக மொத்தம் 33 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1.23 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க அரசாணை எண்.523 கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நாள் 14.08.20023 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TNGovt announced relief fund for 33 damaged fishing boats