''வேட்டையன்'' கதை மிகவும் வித்தியாசமானது... - ராணா டகுபதி தகவல்!
Rana Daggupathi says Vettaiyan story very different
த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''வேட்டையன்''. இந்த திரைப்படத்தில் அமிதாபச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது மும்பையில் ரசினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனுக்கான காட்சிகள் படமாக்கப்படுகிறது.
100 நாட்களைக் கடந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ராணா டகுபதி,
ரஜினி சாரின் மற்ற படங்களை ஒப்பிடும்போது வேட்டையன் கதை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அவர் இது போன்ற கதையில் நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த திரைப்படம் நீதித்துறை காவல்துறை மற்றும் தொழில் முனைவோர் அமைப்பை குறித்து பேசுகிறது. இந்த கதைக்காக பெரிய ஆய்வு செய்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
Rana Daggupathi says Vettaiyan story very different