#தமிழகபட்ஜெட்2023 | சென்னை கூவம், அடையாறு நீர் வழித்தடங்களில் ரூ.1500 கோடி ரூபாயில் மறு சீரமைப்பு திட்டம்! 
                                    
                                    
                                   TNBudget2023 announce for Koovam Adaiyaru 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதில் முக்கிய அறிவிப்பில் சில :
* தெரு நாய்களுக்கான இன விருத்தி கட்டுப்பாட்டு மையம் அமைக்க பத்து கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
* சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி காலை அரங்கம் உள்ளிட்ட நகர்ப்புற வளர்ச்சிகள் கொண்டுவரப்படும். கண்காட்சி அரங்குகள் உள்ளிட்டவைக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* சென்னை கூவம் அடையாறு நீர் வழித்தடங்களில் 1500 கோடி ரூபாயில் மறு சீரமைப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்
* அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
* உக்ரைன் போர், உலகளாவிய நிதி நெருக்கடிகள் காரணமாக வரும் ஆண்டில் நிதி ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைக்கப்படும்.

* நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கான கருணைத்தொகை ரூ. 40 லட்சமாக உயர்வு.
* வரும் நிதி ஆண்டிலிருந்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்"பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு"
* 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்"
* இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
* ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆக அதிகரிப்பு.
* மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் 
* சங்கமம் கலை விழா வரும் ஆண்டுகளில் மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும் 
* 25 இடங்களில் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் 
* வயது முதிர்ந்த மேலும் 591 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும் 
                                     
                                 
                   
                       English Summary
                       TNBudget2023 announce for Koovam Adaiyaru