13ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தென்னிந்திய ப்குதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஜூன் 10 முதல் 13ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 10 – விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை.

ஜூன் 11 – ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.

ஜூன் 12 – காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை சாத்தியம்.

ஜூன் 13 – நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மேகமூட்டம் நிலவும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்யலாம். அதேவேளையில், மதியம் வெயில் தாக்கம் 100°F-ஐ தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Rain update IMD 07 june 2025


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->