தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் கடைசி இடம் பிடித்த ராணிப்பேட்டை மாவட்டம்!
TN 12th School Exam Result Last Place
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதிய சுமார் 8.50 லட்சம் மாணவ-மாணவியர்களில், 7,55,451 (94.03%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் : 96.38% பேரும், மாணவர்கள்: 91.45% பேரும், சிறைவாசிகள் : 79 பேரும், மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் தெறிச்சி பெற்றுள்ளனர்.
* அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
* ஒட்டுமொத்தமாக அதிக அளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
* இரண்டாவது இடத்தில் திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவீத தேர்ச்சி உடன் இடம் பிடித்துள்ளது.
* தமிழகத்தைப் பொறுத்தவரை பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 87.30 சதவீத தேர்ச்சி பெற்ற ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
* சென்னை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 44 ஆயிரத்து 37 மாணவர்களில், 41,720 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீதம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 92.47 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
English Summary
TN 12th School Exam Result Last Place