தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் கடைசி இடம் பிடித்த ராணிப்பேட்டை மாவட்டம்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதிய சுமார் 8.50 லட்சம் மாணவ-மாணவியர்களில், 7,55,451 (94.03%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் : 96.38% பேரும், மாணவர்கள்: 91.45% பேரும், சிறைவாசிகள் : 79 பேரும், மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் தெறிச்சி பெற்றுள்ளனர்.

* அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
* ஒட்டுமொத்தமாக அதிக அளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

* இரண்டாவது இடத்தில் திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவீத தேர்ச்சி உடன் இடம் பிடித்துள்ளது.

* தமிழகத்தைப் பொறுத்தவரை பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 87.30 சதவீத தேர்ச்சி பெற்ற ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

* சென்னை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 44 ஆயிரத்து 37 மாணவர்களில், 41,720 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

* செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீதம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 92.47 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN 12th School Exam Result Last Place


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->