மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எரிப்பள்ளம் கிராமத்தை சார்ந்தவர் ரகு என்ற ரவி (வயது 50). இவர் விவசாயியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி ரஞ்சிதம் (வயது 45). கணவன் - மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது உண்டு. 

அந்த வகையில், நேற்று இரவு நேரத்திலும் தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், மனைவி ரஞ்சிதத்திற்கும் - மற்றொரு வாலிபருக்கு இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக ரவி சந்தேகித்துள்ளார். 

இதனால் இவர்களுக்குள் தகராறு அதிகரித்த நிலையில், ஆத்திரமடைந்த ரகு மனைவியை அடித்து, கத்தியால் ரஞ்சித்தின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே ரஞ்சிதம் துடிதுடித்து பலியான நிலையில், இவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்துள்ளனர்.

இதனைகவனித்த ரவி அங்கிருந்து தப்பி செல்லவே, அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள குரிசிலாப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரவியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur wife Murder by Husband 16 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->