2019 முதல் 274 தலைமறைவுக் குற்றவாளிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!
274 Fugitives Extradited to India Since 2019 Ministry of External Affairs Reports
பயங்கரவாதிகள், கேங்ஸ்டர்கள், நிதி மோசடி செய்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய 274 குற்றவாளிகள், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கம் செய்துள்ளது.
குற்றங்களின் பின்னணி & வகைப்பாடு
கொலை மற்றும் போக்சோ குற்றங்கள்: அழைத்து வரப்பட்டவர்களில் 62 பேர் கொலை மற்றும் திருட்டுச் சம்பவங்களிலும், 53 பேர் பாலியல் தாக்குதல் மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
பயங்கரவாதம் & குண்டர் வலையமைப்பு: 17 பேர் பயங்கரவாதம், தேசவிரோதச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்காகவும், 2 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்குகளிலும் தேடப்பட்டவர்கள்.
பிற குற்றங்கள்: நிதி மோசடி, இணையவழிக் குற்றங்கள், ஆட்கடத்தல், கள்ள நோட்டு தயாரிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.
ஆண்டுவாரியாக அழைத்து வரப்பட்டோர் எண்ணிக்கை
2019 – 2020: 2019-இல் 9 பேரும், 2020-இல் 7 பேரும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
2021 – 2024: இதன் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 2021-இல் 23, 2022-இல் 40, 2023-இல் 37 மற்றும் 2024-இல் 43 ஆக அதிகரித்தது.
2025 – 2026: 2025-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 70 பேரும், 2026-ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதி வரை மேலும் 45 குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ராஜதந்திர நடவடிக்கைகளும் சட்டத் திருத்தமும்
சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது: வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டால் இந்தியச் சட்டத்தால் பிடிக்க முடியாது என்று கருதி, பெயர்களையும் அடையாளங்களையும் மாற்றிக்கொண்டு தலைமறைவாக வாழ்ந்தவர்களுக்கு இ நடவடிக்கை பெரும் எச்சரிக்கையாக அமைந்தது.
36 நாடுகளுடன் கூட்டு நடவடிக்கை: பல்வேறு வெளிநாட்டு அரசுகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும், சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டும் மொத்தம் 36 நாடுகளில் இருந்து இக்குற்றவாளிகளை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது.
English Summary
274 Fugitives Extradited to India Since 2019 Ministry of External Affairs Reports