திருவள்ளூரில் சோகம் - குளத்தில் மூழ்கி 3 பேர் பலி.!!
three peoples died for drowned water in thiruvallur
திருவள்ளூரில் கோவில் குளத்தில் தவறி விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் உள்ள குளத்தில் சந்தியாவந்தனம் செய்யும் போது மாணவர்கள் மூன்று பேர் படிக்கட்டில் இருந்து தவறி குளத்தில் விழுந்துள்ளனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது சேலையூர் மடத்தில் பயின்று வந்த ஹரிஹரன், வெங்கடரமணன், வீரராகவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
three peoples died for drowned water in thiruvallur