தாம்பரம் || சுடுகாட்டில் கிடந்த வாலிபர் உடல் - காதலியின் சகோதரர்கள் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜீவா. கானா பாடல் பாடி, மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்த இவர், குண்டுமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த ஜீயேவா அந்த மாப்பிள்ளைக்கு, அந்த பெண்ணுடன் தான் சேர்ந்து இருக்கும் படத்தை அனுப்பியுள்ளார். இது குறித்து பெண்ணின் தந்தை கோவிந்தராஜனுக்கு தெரிய வர, அவர் தனது மகன்களுடன் சேர்ந்து ஜீவாவை கண்டித்தனர்.

இந்த நிலையில், ஜீவா நேற்று முன்தினம் மாலை அந்த பெண்ணுடன் பெருங்களத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணின் சகோதரர்கள் அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இதை தட்டி கேட்பதற்காக ஜீவா தனது நண்பர்களுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வருவதை கண்டதும், தகராறில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். அனால், ஜீவா இரவு 11 மணி அளவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அப்போது பெண்ணின் சகோதரர்கள், தகராறில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டியுள்ளனர். ஆனால், ஜீவா மட்டும் அவர்களிடம் தனியாக சிக்கிக்கொண்டார். 

அவரை பெண்ணின் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள், அங்குள்ள சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று அரிவாளால் தலையில் வெட்டியும், தலையில் கல்லை தூக்கி போட்டும் கொலை செய்துள்ளனர். இதனை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை தொடர்பாக இளம்பெண்ணின் சகோதரர்களான விஜய், அஜித், அவர்களது நண்பர் அரவிந்தன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for murder in thambaram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->