அரசு பேருந்து மீது கல்வீச்சு - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


தென்காசியில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று மதுரை நோக்கி வந்தது. இந்தப் பேருந்தில் செக்கானூரணி பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் தனபாண்டியனும், நடத்துனராக பால்பாண்டியும் பணியில் இருந்தனர். இதையடுத்து இந்தப் பேருந்து நேற்று அதிகாலை டி.கல்லுப்பட்டி நிறுத்தத்தில் நின்றது. 

அப்போது, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் ஏறினர். இதைத் தொடர்ந்து பேருந்து அங்கிருந்து புறப்பட்டு திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, திருமங்கலம் அரசு கால்நடை மருத்துவமனை அருகே, திடீரென மர்மநபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சுக்கு நூறானது. மேலும், பேருந்தில் இருந்த பெண் பயணிகள் மீது கண்ணாடி துகள்கள் விழுந்ததில் சிலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 

இந்த சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பேருந்து மீது கல்வீசிய மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three passengers injured for attck govt bus in thirumangalam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->