மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாப பலி.. மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் திட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம் திருமணமாகி ஹேமா மனைவியும் என்ற  மகளும் உள்ளனர்.  நிவாஸ் ரத்தினம் தனது வீட்டில் புதிய மின் விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அவரை காப்பாற்ற சென்ற பொழுது அவரையும் அவரது 2 வயது குறைந்த மின்சாரம் தாக்கி மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது மூவரும் அசைவற்றுக் கிடந்ததை அதிர்ச்சியடைந்தனர்.

பக்கத்துவீட்டு பெண் அவர்களை எழுப்ப முயன்ற போது அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட அவர் விலகி சப்தமிட்டார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three members of the same family were electrocuted


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->