சொத்தை கிரையம் கொடுத்து கடன் பெறுபவர்களே உஷார்..பாதிக்கப்பட்டவர் எஸ்.பி., யிடம் புகார்.! - Seithipunal
Seithipunal


தன்னிடம் உள்ள சொத்துக்களை வைத்து கடன் பெறுபவர்கள் வட்டி செலுத்தவில்லை என்றால் சொத்து கிரையம் செய்து கொடுத்தவருக்கு தெரியாமலேயே வேறு நபர்களுக்கு கிரயம் செய்து கொடுப்பது போன்ற நம்பிக்கை மோசடி வேலையில் ஒரு சில புரோக்கர்கள் செயல்படுகின்றனர், 

சொத்துக்காகவே தனி நபரிடம் கடன் பெற்று கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள், அப்படி நம்பிக்கை துரோகம் செய்யும் நபர்கள் மீது ஈரோடு மாவட்ட எஸ்.பி ., இடம் தனது சொத்துக்களை மீட்டுத் தர புகார் வழங்கியவர் பற்றிய தகவல்...

ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாகரன் இவரது மனைவியின் பெயரில் ஒரு கோடியே 80 லட்சம் மார்க்கெட் மதிப்பு உடைய சொத்தை வைத்து ஏற்கனவே 25 லட்ச ரூபாயில் கடன் பெற்று இருந்ததை மீட்டு வேறு ஒரு நபரிடம் கடன் பெற்று தருவதாக கூறி முருகேசன் ,கோபி என இருவர் கருணாகரனிடம் தெரிவித்ததோடு ஈரோட்டில் பிரபலமான ஒருவருடைய பெயரை (பசுபதி அக்காள்) கூறி வேறு ஒரு நபரிடம் திட்டம் தீட்டி கமலம் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்து பணத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அதற்காக 5 சதவீத கமிஷனும் வாங்கியிருக்கிறார்கள்,

 அதன் பிறகு ஏழு மாதங்கள் வட்டி கட்டவில்லை என்பதற்காக தன்னிச்சையாக முருகேசன், கோபி ஆகியோர் நாகராஜ் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்திருக்கிறார்கள் நாகராஜ் என்பவர் கருணாகரன் வீட்டிற்கு நேரில் வந்து நீங்கள் கடன் பெற்று வட்டி செலுத்தவில்லை எனவே நான் கிரயம் பெற்று இருக்கிறேன் .கிரைய தொகையாக 58 லட்சம் இதற்கு நீங்கள் ஒரு ரூபாய் 50 பைசா வட்டி செலுத்துங்கள் உங்களது சொத்தை இரண்டு வருடம் கழித்து கூட மீட்டுக் கொள்ளுங்கள் என்று பேசிய வீடியோ ஆதாரத்தையும் மாவட்ட எஸ்.பி., இடம் காண்பித்து புகார் வழங்கி உள்ளார்,

 மேலும் புரோக்கர்களாக செயல்பட்ட முருகேசன் ,கோபி ஆகியோர் கருணாகரன் பெயரில் இருந்த 25 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டு பத்திரத்தையும் வைத்து தனது இளைய மகன் திருமண நிச்சயம் நிகழ்ச்சிக்காக அவசர தேவை என்பதை உணர்த்தி 10 லட்சம் தாருங்கள் என ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் அதனோடு வெற்று பேப்பரிலும் கையொப்பமிட்டு கொடுத்திருக்கிறார். அவசரத் தேவையை அறிந்த புரோக்கர்கள் கடைசி நேரத்தில் இரண்டு லட்சம் பத்து ரூபாய் வட்டிக்கு தான் கிடைக்கும் அதில் கமிஷன் மற்றும் வட்டிப் போக ஒரு லட்சத்து 70 ஆயிரம் கொடுத்து உள்ளனர்.

  தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்து அருகே  வசிக்கும் நபர்கள் கருணாகரனிடம் போனில் பேசியபோது சொத்தை விற்று விட்டதாகவும் வேறு ஒருவர் உனது இடத்தை சுத்தம் செய்து சீர்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் .உடனே நேரில் சென்று பார்த்த பொழுது தனது இளைய மகனுக்காக தேங்காய் குடோன் அமைத்து தொழில் செய்வதற்காக தண்ணீர் தொட்டி மற்றும் களம் அமைத்து ரூ 20 லட்சம் செலவு செய்துள்ளதை இடித்து நிரவி சமன் செய்தும்  சொத்து கைமாறியவர் இடத்தை சுத்தம் செய்து கொண்டு இருப்பது தெரிய வந்தது .பிறகு வில்லங்கச் சான்றை பார்த்த பொழுது வேறு இரு நபர்கள் ஒரு மாத இடைவெளியில் கிரயமாக மாற்றி உள்ளதை பார்த்த கருணாகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது நாகராஜ் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்ததில் ரூ.18 லட்சம் அபகரித்ததோடு தனது சொத்து வேற ஒருவருக்கு விற்கப்பட்டதும் நாகராஜ் என்பவர் நேரில் பேசிய வீடியோ இருக்கிறது.

 ஆனால் சொத்தை பற்றி கவலை வேண்டாம் வட்டி செலுத்துங்கள் உங்களது சொத்து எனக்கு வேண்டாம் என கூறி சென்ற நாகராஜ் 10 நாட்களிலேயே 25 சென்ட் பரப்பளவு உள்ள நிலத்தைப் பிரித்து வேறு ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளது தெரியவந்தது .இதனால்  நம்பிக்கை துரோகம் செய்த புரோக்கர்கள் முருகேசன் கோபி அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கமலம் நாகராஜ் ஆகியோர் மீது விசாரணை மேற்கொண்டு எனது ஆவணத்தை உண்மையாக நான் பெற்ற கடன் தொகைக்கு ரூ.150 வட்டி வீதம் செலுத்தி மீட்டுக் கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் மேலும் கருணாகரன் தனது பெயரில் உள்ள ஒரிஜினல் ஆவணம் ஆகியவற்றை மீட்டு தரக கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி உள்ளார் புரோக்கர்களாக செயல்படுபவர்கள் நான்கில் ஒரு பங்கு மார்க்கெட் மதிப்பில் கடன் பெற்று தருகிறார்கள்.

ஆனால் வட்டி செலுத்தவில்லை பணம் வாங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் வட்டி கொடுக்கவில்லை  என்பதற்காக சொத்தை கிரையம் கொடுத்தவருக்கே தெரியாமல் மோசடி வேலையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் எனக்கு நேர்ந்தது போல் இனி  வேறு யாரும் ஏமாற்றப்படக்கூடாது என்று சட்டத்தின் படி தண்டிக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி , இடம் புகார் மனு வழங்கியுள்ளார் .புகாரி ஏற்ற ஈரோடு எஸ்பி அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொள்வதற்கு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரனிடம் புகார் அனுப்பப்பட்டு இரண்டு தினங்களுக்குள் விசாரிப்பதற்கு உங்களுக்கு அழைப்பு வரும் என்று தெரிவித்ததாக கூறினார் .சொத்தை முழு கிரையும் கொடுப்பவர்கள் அவசர தேவைக்கு பணம் கிடைத்தால் போதும் என்று நம்பி ஏமாற்றப்படுகிறார்கள்  இதுபோன்ற நபர்களிடம் இருந்து  தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உஷாராக இருங்கள் இது ஒரு விழிப்புணர்வு செய்தி.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those who take loans by giving property as collateral bewareThe affected person has lodged a complaint with SP


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->