27 பரோட்டா, சிக்கன் ரைஸ் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு.. தூத்துக்குடி வி.ஐ.பி பிரியாணி கடை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பரோட்டா, சிக்கன் ரைஸ் போன்ற உணவுகளை விரைந்து சாப்பிட்ட நபருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் வி.ஐ.பி பிரியாணி கடை சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்டது. இதனால் கடையில் பரோட்டா திருவிழாவானது நடைபெற்று வருகிறது. கடைக்கு சாப்பிட வரும் நபர்கள் 27 பரோட்டா, 1 சிக்கன் ரைஸ், பலூடா ஆகியவற்றை ஒரே முறையில் சாப்பிட்டு முடித்தால் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த இளைஞர்கள் பலரும் போட்டிக்கு முன்பதிவு செய்ய வருகின்றனர். 

போட்டியில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் வெற்றியடையும் பட்சத்தில், அவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. அவர்கள் சாப்பிடுவதற்கு பணம் செலுத்த தேவையில்லை. போட்டியில் தோல்வியை தழுவும் பட்சத்தில், சாப்பிட்ட உணவுக்கு மட்டும் பணம் வழங்க வேண்டும். இந்த அறிவிப்பு தூத்துக்குடி நகர இளைஞர்களிடையே வரவேற்பை தந்துள்ளது.

இந்த போட்டியில் கலந்துகொண்ட பூபாலராயபுரம் பகுதியை சார்ந்த அருண் பிரகாஷ் என்ற இளைஞர், அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வெற்றி அடைந்த நிலையில், அவருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi VIP Biryani Shop Food Eating Challenge


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->