திருவாரூர்: பள்ளிகள் திறக்கப்படும் வேளையில், பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து...!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசலில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 700 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வந்துள்ளனர். இந்த பள்ளியில் 600 சதுர அடி பரப்பில் கீழ்தளம் மற்றும் மேல்தளம் உள்ள கட்டிடம், கடந்த 2003 ஆம் வருடம் அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்டது. 

இந்த பள்ளிக்கட்டிடத்தை அதிமுகவை சேர்ந்தவரே ஒப்பந்தப்புள்ளி கோரி கட்டிடத்தை கட்டிய நிலையில், கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்து சேதமாகியுள்ளது. இதனால் அந்த பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைத்துள்ள பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

தற்போது, வரும் 19 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளிகள் செயல்பட துவங்கவுள்ள நிலையில், கட்டிடம் இடித்து விழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வருடத்திற்கு உள்ளாகவே கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur School Building Damaged


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->