நாளை முழு ஊரடங்கு... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!
Thiruvarur district collector announce corona virus amid strictly tomorrow
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது பெரும் சோகத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் 29 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்ட மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று தடை விதிக்கப்ட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய கடைகளில் இருந்து அணைத்து கடைகளையும் மூடக்கூறி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கு சமயத்தில் மருத்துவ கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர்த்து பிற பணிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvarur district collector announce corona virus amid strictly tomorrow