திருப்போரூர் கோவில் நிலம் மீட்பு: ₹700 கோடி மதிப்பிலான 240 ஏக்கர் வசமானது!
Thiruporur Temple Land Recovery
திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர்.
கந்தசாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் 240 ஏக்கர் நிலம் தனிநபர்கள் வசமிருந்தது. நிலத்தை மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதமானதால், தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் "21 நாட்களுக்குள் நிலத்தை மீட்க வேண்டும்" என நீதிமன்றம் கடும் கெடு விதித்தது.
கடந்த மாதம் 31-ஆம் தேதி முதற்கட்டமாக 40 ஏக்கர் மீட்கப்பட்டபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத் தடை பெற்று வர வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
பாதுகாப்பு: இன்று அதிகாலை 5:30 மணிக்கே 100-க்கும் மேற்பட்ட போலீசார் திருப்போரூர்-நெம்மேலி சாலையில் குவிக்கப்பட்டனர்.
மீட்புப்பணி: காலை 6 மணி முதல் வட்டாட்சியர் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
ஒரே நாளில் 200 ஏக்கர்: இன்று மட்டும் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டன.
மொத்தம் மீட்கப்பட்ட 240 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ₹700 கோடி இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை திருப்போரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலை: மீட்கப்பட்ட நிலங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்காமல் இருக்கக் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
Thiruporur Temple Land Recovery