3 ஆண்டுகளாக கொடுமை அனுபவித்த சிறுமி...! - வீடியோவைக் காட்டி மிரட்டிய 8 பேர் சிக்கியது எப்படி...?
girl who suffered harassment 3 years How 8 people who threatened her video caught
குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கொடூரச் சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம், நீண்டகாலமாக மறைந்திருந்த கொடுமையை வெளிப்படுத்தியுள்ளது.

2023-ம் ஆண்டு, பர்வேஸ்கான் பதான் (23) என்ற நபர், அந்த சிறுமியை மிரட்டிக் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து தனது நண்பர்களிடம் பகிர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, அவரது நண்பர்களும் சிறுமியை மிரட்டி கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.நீண்டநாளாக மனஅழுத்தத்தில் தவித்த அந்த சிறுமி, இறுதியில் தைரியம் திரட்டி தனது பெற்றோரிடம் உண்மையை பகிர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பெற்றோர் உடனடியாக காவலர்களை அணுகி புகார் அளித்தனர்.இந்த புகாரின் பேரில், காவலர்கள் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பர்வேஸ்கான் பதான் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 26 வயதுக்குள் உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை பிடிக்க காவலர்கள் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் தீவிர கவலைகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
girl who suffered harassment 3 years How 8 people who threatened her video caught